"கணவரை கண்டுகொள்ளாத தீபிகா படுகோனே"... கடுப்பான ரன்வீர் சிங்!

1 year ago 144
செய்திக்கு கிரிக்கெட் செய்திக்கு செயலிக்கு

தீபிகா படுகோனே

6 வருடங்களாக காதலித்து வந்த ரன்வீர் மற்றும் தீபிகா கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் நடிகை தீபிகா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ரன்வீர் மற்றும் தீபிகா படுகோனே கலந்து கொண்டுள்ளனர்.

இருவரும் சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்ற போது ரன்வீர் தீபிகாவின் கையை பிடிக்க முயற்சிக்கிறார். ஆனால் தீபிகா அவருக்கு கை கொடுக்காததோடு ரன்வீரை கண்டு கொள்ளவும் இல்லை. 


இதனால் கோபமடைந்த ரன்வீர் சிங் முன்னாள் வேகமாக நடந்து சென்று விட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதற்கிடையில் ரன்வீர் தன்னுடைய வலைதள பக்கத்தில் பிங்க் நிற உடை அணிந்து ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவிற்கு தீபிகா கமெண்ட் செய்துள்ளார். 

அதற்கு ரன்வீர் முத்த எமோஜியை அனுப்பியுள்ளார். மேலும் இதனால் தற்போது ரசிகர்கள் மத்தியில் ரன்வீர் மற்றும் தீபிகா படுகோனே விஷயத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க
பேஸ்புக்கில் செய்திகளை உடனுக்குடன் படிக்க