நடிகை சித்ராவின் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி... கொண்டாட தயாரா?

3 years ago 406

 சீரியல் நடிகை சித்ரா தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கி சின்னத்திரை நடிகையாக வலம் வந்தார். 

கடைசியாக அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற வேடம் நடித்து லட்சக்கணக்கான மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

அவரை தங்களது வீட்டின் ஒரு பெண்ணாகவே நினைத்தார்கள். ஆனால் அவர் திடீரென சில பிரச்சனைகளால் தற்கொலை செய்துகொண்டு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.

தற்போது அவரது ரசிகர்களுக்கு ஒரு சின்ன சந்தோஷ செய்தி வந்துள்ளது. அதுஎன்னவென்றால் சித்ரா நடித்த Calls திரைப்படம் விரைவில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம்.