பிக்பாஸ் சரவணனுக்கு இரண்டாவது திருமணத்தை நடத்தி வைத்தது யார் தெரியுமா?

4 years ago 242

தமிழில் ஒளிபரப்பாகி மு.டிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பருத்தி வீரன் சித்தப்பு, குழந்தை இல்லாத காரணத்தினால் நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த இரண்டாவது திருமணத்தை என் முதல் மனைவி தான் நடத்தி வைத்தார் என்று கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

மேலும் இதையடுத்து அவரின் முதல் மனைவி சூர்யா சரவணன், பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் நாங்கள் இருவரும் அடையர் பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்தோம். அப்போது காதலித்தோம், எங்களின் காதலுக்கு எ திர்ப்பு இருந்தது. 

பெற்றோரை எ திர்த்து காதல் திருமணம் செய்து கொண்டோம். அதன் பின் எங்களுக்கு குழந்தையே பிறக்கவில்லை. நான் எவ்வளவோ சிகிச்சை பெற்றும் எங்களுக்கு குழந்தை இல்லை. அவரது குடும்பத்தினர் திடீரென இரண்டாவது திருமணம் செய்ய வற்புறுத்தினர் நானும் அவரது நல்லதுக்காக அந்த திருமணத்தை நடத்தி வைத்தேன்.

மேலும் இப்போது அவருக்கு குழந்தை உள்ளது. ஆனாலும் எனது கணவர் மீது எனக்கு அவ்வளவு பாசம் உள்ளது. அவர் மிகவும் நல்லவர் என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.