பிரியாமணியின் திருமணம் செல்லாது.. ஆப்பு வைத்த பெண்மணி

3 years ago 287
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியாமணி. பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் சோலோ ஹீரோயினியாக சில படங்களில் நடித்தார்.

இவர் முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 

இப்படியான நிலையில் முஸ்தபா ராஜின் முதல் மனைவி ப்ரியாமணி திருமணம் செல்லாது என நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

எனக்கு என்னுடைய கணவருக்கும் இன்னும் விவாகரத்து ஆகவில்லை. அவ்வளவு ஏன் நாங்கள் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை கூட அணுகவில்லை என கூறியுள்ளார். இதனால் பிரியாமணியின் திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

ஆனால் முஸ்தபா ராஜ் நாங்கள் இருவரும் 2010ஆம் ஆண்டு பிறந்து விட்டோம். 2013 ஆம் ஆண்டில் விவாகரத்தும் பெற்றோம். என் குழந்தைகளுக்காக தொடர்ந்து பணம் அனுப்பி வருகிறேன். 

அப்படி இருக்கையில் எங்களிடம் இருந்து பணம் பறிக்க ஆயிஷா இவ்வாறு செய்கிறார். நீதிமன்றத்தை நாட உள்ளோம் என கூறியுள்ளார்.