வானத்தில் திருமணம்... கடலுக்கு அடியில்... பார்வதி நாயரின் திருமண ஆசை

4 years ago 230
 தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து வருபவர் பார்வதி நாயர். தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படம் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.

தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரூபம் எனும் பேய் படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் தனது திருமண ஆசைகள் குறித்து கூறியுள்ளார்.

அதில் விளம்பரங்களில் வரும் திருமணங்களில் மணப்பெணாக நடித்து தனது கேரியரை தொடங்கியதாகவும் ,எனவே தனது திருமணம் வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதாவது ஏர் பலூன் அல்லது பிரைவேட் ஜெட்டில் தனது குடும்பத்தின் முன்னிலையில் ஆகாயத்தில் வைத்து தனது திருமணம் நடக்க வேண்டும் என்றும், அதே போன்று தன்னிடம் புரோபோஸ் செய்பவர்கள் கடலுக்கு அடியில் அண்டர்வாட்டரில் புரப்போஸ் பண்ண வேண்டும் என்று நினைப்பதாகவும் கூறியுள்ளார்.